Follow me @ RajaKL in Twitter

Monday, July 5, 2010

நாமே நமக்கு எதிரி !

சமிபத்தில் மனம் விட்டு சிரித்து மகிழ்தது நம்ம ராமதாஸ் கலைஞர் கிட்ட வாங்கிய ஆப்பு பற்றிய செய்திய பார்த்து...
அன்புமணிக்கு ராஜ்ய சபை சீட் கொடுக்காமல், செலவில்லாமல் பாட்டாளி மக்கள் கட்சிய காலி பண்ணியது கருணாநிதியின் தந்திரம்.

- இனி அன்புமணி பார்லிமென்ட் போகவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி அடைந்து சென்றால் தான் உண்டு. அதற்கு இப்போது வாய்ப்பில்லை. முன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

- ராஜ்ய சபை சீட் அடுத்த ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

- ஆ. தி. மு. க . வுடன் பகைத்து கொண்டு வெளியே வந்தாயிட்டூ. இன்னிமே தி. மு. க தான் கதி. அடுத்த வருடம் வரும் சட்ட மன்ற தேர்தலில் ப்ரியபட்டு தி. மு. க. கொடுக்கும் சீட் களில் நின்று வெற்றி அடைய வேண்டும். அது வரை தி. மு. க வை எதிர்த்து முச்சு கூட விட முடியாது.

- விஜயகாந்த் தமிழக மக்களை விட காங்கிரஸ் தலைமையை மிகவும் நேசிப்பவர். தி. மு. க வை இங்கே விமர்சித்து விட்டு அங்கே காங்கிரஸ் மேல் அன்பு கட்டினால் மக்களுக்கு என்ன பிரயோஜனம். இதனால் வரும், வர போகின்ற சட்டமன்றம் தேர்தலில் இவருக்கு ஒட்டு எண்ணிக்கை குறையும். ஆ. தி. மு. க வுடன் சேர்ந்து, கம்யூனிஸ்ட், ம. தி. மு. க உடன், ஒரே குரலில் போரிட்டால் ஒழிய தி. மு க வை விழ்த்த முடியாது.

- இந்தியவில் நாம் இப்போது விலை வாசி உயர்வால் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம். இன்று நடந்து கொண்டு இருக்கும் பாரத பந்த் தமிழ் நாட்டை தவிர எல்லா மாநிலமும் வெற்றி. கரணம் நம் எதிர்க்கட்சி கிடைகளிலேய ஒற்றுமை இல்லாதது தான்.

- ஜெயலலிதா கொடநாடு சென்று தூங்கி கொண்டு அறிக்கை விட்டால் மட்டும் போறாது. சாலையில் இறங்கி மக்களுகாக போராட வேண்டும். இல்லையேல் அடுத்த சட்டமன்றம் தி. மு. க வாசம.

- கடவுளே எங்களை காப்பாற்று.

No comments: