Follow me @ RajaKL in Twitter

Tuesday, July 6, 2010

மாயாஜால் லில் ஒரு திருடன் ! உஷார் !!

நேற்று மாயாஜாலில் இராவணன் படம் பார்க்க என் அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன். இந்த ப்ளாக் இராவணன் படத்தை பற்றியது இல்லை.

மாலை காட்சிக்கு சென்று இருந்தனால் இடை வேளை யில் ஒரே பசி. சரி எதாவுது சாப்பிடுவோம் என்று அங்கு இருந்த கடைகளை ஆராய்ந்தேன்.
சமோசா வை பார்த்துடன் சாப்பிட வேண்டும் போல் எண்ண, பணத்தை எடுத்து 1 plate சமோசா வும் 1 வாட்டர் பாட்டில் லும் (அரை லிட்டர்) வாங்கினேன்.நூறு ரூபாய் கொடுத்தேன். மீதி 35 ரூபாய் கொடுத்து பில் கொடுத்தான். சமோசா எவ்வளவு என்று கேட்டேன் - 40 ரூபாய் என்றான்.
மயக்கம் வருவது போல் இருந்தது .. இத்தனைக்கும் சமோசா மிக சிறியது.. 4 தான் இருந்தது. வயிர் எரிந்தது.. வாட்டர் பாட்டில் விலை என்று பார்த்தல் 25 ரூபாய். அதுவும் அரை லிட்டர். அட பாவிகளா.. ஏன்டா இப்படி கொள்ளை அடிகறிங்க என்று உங்கள் முதலாளி யார் என்று கேட்டான். ஒருவனை கை நிட்டினார்கள்.

அவனிடம் போய் இந்த சமோசா 40 ரூபாய் விற்பதுக்கு இதில் எண்ண விசேஷம் என்று கேட்டேன். அவனிடம் பதில் இல்லை. மாறாக சிரித்தான்.
விலை அதிகமாக இருப்பதை பார்த்து வந்த கோவத்தை விட அவன் சிரித்த விதம் என்னை மேலும் கோபபட வைத்தது. உசிதம் இருந்தால் வாங்கு இல்லை இடத்தை காலி பண்ணு என்று சொல்வதை போல் இருந்தது. பசியால் அவனை திட்டி கொண்டே சாப்பிட்டேன். வேறு வழி இல்லாததினால்.

இதை போல் அநியாய மகா விலை வைத்து விற்பவர்களை எங்கே புகார் செய்வது.. ??? கமெண்ட் போடவும்..!!

பி. கு : பலரும் சொல் வது போல் படம் மோசம் இல்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய் ய் விட ப்ரியாமணி அழகாக இருப்பது போல் தோன்றியது.

Monday, July 5, 2010

நாமே நமக்கு எதிரி !

சமிபத்தில் மனம் விட்டு சிரித்து மகிழ்தது நம்ம ராமதாஸ் கலைஞர் கிட்ட வாங்கிய ஆப்பு பற்றிய செய்திய பார்த்து...
அன்புமணிக்கு ராஜ்ய சபை சீட் கொடுக்காமல், செலவில்லாமல் பாட்டாளி மக்கள் கட்சிய காலி பண்ணியது கருணாநிதியின் தந்திரம்.

- இனி அன்புமணி பார்லிமென்ட் போகவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி அடைந்து சென்றால் தான் உண்டு. அதற்கு இப்போது வாய்ப்பில்லை. முன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

- ராஜ்ய சபை சீட் அடுத்த ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

- ஆ. தி. மு. க . வுடன் பகைத்து கொண்டு வெளியே வந்தாயிட்டூ. இன்னிமே தி. மு. க தான் கதி. அடுத்த வருடம் வரும் சட்ட மன்ற தேர்தலில் ப்ரியபட்டு தி. மு. க. கொடுக்கும் சீட் களில் நின்று வெற்றி அடைய வேண்டும். அது வரை தி. மு. க வை எதிர்த்து முச்சு கூட விட முடியாது.

- விஜயகாந்த் தமிழக மக்களை விட காங்கிரஸ் தலைமையை மிகவும் நேசிப்பவர். தி. மு. க வை இங்கே விமர்சித்து விட்டு அங்கே காங்கிரஸ் மேல் அன்பு கட்டினால் மக்களுக்கு என்ன பிரயோஜனம். இதனால் வரும், வர போகின்ற சட்டமன்றம் தேர்தலில் இவருக்கு ஒட்டு எண்ணிக்கை குறையும். ஆ. தி. மு. க வுடன் சேர்ந்து, கம்யூனிஸ்ட், ம. தி. மு. க உடன், ஒரே குரலில் போரிட்டால் ஒழிய தி. மு க வை விழ்த்த முடியாது.

- இந்தியவில் நாம் இப்போது விலை வாசி உயர்வால் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம். இன்று நடந்து கொண்டு இருக்கும் பாரத பந்த் தமிழ் நாட்டை தவிர எல்லா மாநிலமும் வெற்றி. கரணம் நம் எதிர்க்கட்சி கிடைகளிலேய ஒற்றுமை இல்லாதது தான்.

- ஜெயலலிதா கொடநாடு சென்று தூங்கி கொண்டு அறிக்கை விட்டால் மட்டும் போறாது. சாலையில் இறங்கி மக்களுகாக போராட வேண்டும். இல்லையேல் அடுத்த சட்டமன்றம் தி. மு. க வாசம.

- கடவுளே எங்களை காப்பாற்று.